Wednesday, August 20, 2014

வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்

வேப்பங்கொட்டை +பூண்டு + புகையிலைக் கரைசல்
ஒரு ஏக்கருக்குத் தேவையான கரைசலைத் தயாரிக்க... வேப்பங்கொட்டை இடித்த தூள்-5 கிலோ, வெள்ளைப் பூண்டு-250 கிராம், கட்டைப் புகையிலை-500 கிராம் ஆகியவை தேவைப்படும். இந்த மூன்றையும் ஒரே காட்டன் துணியில் கட்டி, பத்து லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பிறகு, வடிகட்டினால்... பத்து லிட்டர் கரைசல் கிடைக்கும்.
இலை மட்கு உரம் தயாரிப்பு!
இலை மட்கு உரத்தைத் தயாரிக்க, வயலைச் சுற்றி இருக்கும் மரங்களின் இலை, தழைகளை வெட்டி சேகரிக்க வேண்டும். நிலத்தின் ஒரு மூலையில் தேவையான அளவுக்கு ஒரு குழி எடுத்து, இலை-தழைகளை ஒரு அடுக்கு போட்டு, அடுத்த அடுக்காக சாணத்தைக் கரைத்து தெளிக்கவேண்டும். அதன் மீது செம்மண் போட்டு மூடிவிடவேண்டும். இதுபோல குழி நிரம்பும் அளவுக்கு, இலை-தழை மற்றும் சாணக் கரைசல்-செம்மண் என்று மாற்றி, மாற்றி செய்யவேண்டும். அப்படியே 45 நாட்கள் வைத்திருந்து, குழியைப் திறந்து பார்த்தால்... மட்கு உரம் தயார்.

No comments: