Thursday, May 22, 2008

Old Song's Honey Dew Lyrics -- பழைய பாடல்களின் தேன் துளி வரிகள்

வணக்கம் நண்பர்களே...
பழைய திரைப்பட பாடல்களை கேட்டு திளைக்கும் ஆர்வம் என்னை போல உங்களில் பலருக்கும் உண்டு...
அதை மனதில் கொண்டு... நான் கேட்டு ரசித்த வரிகளை.. இந்த பதிவின் மூலமாக.. உங்களுக்கு படைக்கின்றேன்...உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன... எனது முதல் பாடலாக... "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தில் இருந்து "பச்சைக்கிளி முத்துச்சரம் ......"


ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆண்: தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று..
மெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு...
பெண்:வண்ணச்சோலை வாணம் பூமி யாவும் இன்பம் இங்கு..
இந்தக்கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு...
ஆண்: கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..
பெண்:நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ..

ஆண:பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..

பெண்:மெல்லப்பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..
சொல்லப்போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை.. ஆண்:முள்ளில்லாத தாழை போல தோகை மேனி என்று..
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு..
பெண்: அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ...
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ.
ஆண்: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...

ஆண்:பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன் சிட்டோடு மெல்ல...
நான் தொட்டாடும் வேலை தோறும் போதை என்ன சொல்ல....
பெண்: கைத்தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு...
கண்பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று...
ஆண்: பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பெண்:கூடம் தனில் பாடம் பெரும் காலங்கல் சுவையல்லவோ...
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...


ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..