reduce the cost of cow feed....better way is producing the feed by
youself... for that u need to buy kaambu 100kgs, solam 100kgs, wheat
100ks... then grain it for just 1 time it will b cost around 2rs perkg
to grain those.... so it ll cost overall around some 4500. then buy
kaaruka tavudu and buy pottu 100ksg... by preparing the feed like this u
ll get more profit in dairy farms.... and u need to put 4 to 5 kgs of
green fooder(CO4) and some hay... so hf or jersy cow easily provide more
than 10 liters per day.so dont depend feed on cow feed company it ll
reduce the profit of dairy and it reduce the interest of urs in future
enhancement of dairy farms.... so plan accordingly and analysis properly
to start dairy farm. and u need to have agriculture land by urs...
Monday, February 17, 2014
நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?
நெய்வேலி காட்டாமணக்கு இருக்க, டி.ஏ.பி. எதற்கு?‘‘
‘உலுக்கி எடுக்கும் உரத் தட்டுப்பாடு... சமாளிப்பது எப்படி... வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்' என்ற தலைப்பில் ஜூன் 17-ம் தேதியன்று திருவாரூரில் பசுமை விகடன் நடத்திய பயனுள்ள பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது
‘‘அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி. தேவையே இல்லங்கறதுதான் உண்மை. உங்க ஆறு, குளம், வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும். நான் இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத் துறேன். விளைச்சலும் அமோகமா இருக்கு.
நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஒட்டி, நெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு, ரெண்டு சால் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சி விதைத் தெளிக் கணும். 15 நாள்லயே ஒரு சாண் உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும். சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்க பரப்பி, மறுபடியும் ரெண்டு சால் உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சி நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும். பூச்சி, நோய், களையே இருக்காது. தழைச்சத்தும் நிறைய கிடைக்கும். ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலா கிடைக்குது.
இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை 'விஷச்செடி'னு சொல்றது அறியாமை. இது ஒரு அருமையான உரச்செடி.. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்’’ என சொன்னதும் விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.
‘உலுக்கி எடுக்கும் உரத் தட்டுப்பாடு... சமாளிப்பது எப்படி... வழிகாட்டுகிறார் நம்மாழ்வார்' என்ற தலைப்பில் ஜூன் 17-ம் தேதியன்று திருவாரூரில் பசுமை விகடன் நடத்திய பயனுள்ள பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது
‘‘அடியுரம் போட டி.ஏ.பி. கிடைக்கலையேனு நீங்கள்லாம் தவிக்கிறீங்க. ஆனா, அதுக்கு டி.ஏ.பி. தேவையே இல்லங்கறதுதான் உண்மை. உங்க ஆறு, குளம், வாய்க்கா, வரப்புனு தன் பாட்டுக்கு விளைஞ்சி கிடக்கற நெய்வேலி காட்டாமணக்கு மட்டுமே போதும். நான் இதை மட்டுந்தான் அடியுரமா பயன்படுத் துறேன். விளைச்சலும் அமோகமா இருக்கு.
நாத்தாங்காலுக்கு ரெண்டு சால் உழவு ஒட்டி, நெய்வேலி காட்டாமணக்கை பரப்பி விட்டுட்டுட்டு, பிறகு, ரெண்டு சால் உழவு ஓட்டி, ஒரு வாரம் கழிச்சி விதைத் தெளிக் கணும். 15 நாள்லயே ஒரு சாண் உயரத்துக்கு நாத்து வளர்ந்துடும். சாகுபடி நிலத்துலயும் இதே மாதிரி உழவு ஓட்டி, நெய்வேலி காட்டாமணக்க பரப்பி, மறுபடியும் ரெண்டு சால் உழவு ஓட்டி, பிறகு 10 நாள் கழிச்சி நாத்து நட்டா... இலை பசுமையா இருக்கும். பூச்சி, நோய், களையே இருக்காது. தழைச்சத்தும் நிறைய கிடைக்கும். ஏக்கருக்கு சுமாரா 2,000 கிலோ நெல் மகசூலா கிடைக்குது.
இப்படிப்பட்ட நெய்வேலி காட்டாமணக்கை 'விஷச்செடி'னு சொல்றது அறியாமை. இது ஒரு அருமையான உரச்செடி.. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தணும்’’ என சொன்னதும் விவசாயிகளின் முகங்களில் ஏக மலர்ச்சி.
Friday, February 07, 2014
மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவ
மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில்
ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக்
கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ், தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன்வறுவல் நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ், தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ், தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன்
கோலா )
4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல்
- மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை -
புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் -
மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி மட்டன் பிரியாணி
சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ், சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு, மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம்
பாயா )
2- குமார் மெஸ், தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர்
மஹால் கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )
சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்-
திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன்
( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால்
ரோடு ( கிங்
பரோட்டா,பட்டர்
சிக்கன் )
பஞ்சாபி தாபா -
தல்லாகுளம் ( பட்டர்
நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை -
ஆவின் சிக்னல்
( மதுரையின் சிறந்த
பரோட்டா )
போஸ் கடை-
அண்ணா பஸ்
ஸ்டாண்ட் ( பகலில்
கறிக்கடை,இரவில்
இட்லி கடை )
சிறந்த சைவ
உணவகங்கள் மதிய
உணவு..!
கணேஷ் மெஸ்,
மேலபெருமாள்
மேஸ்திரி ரோடு ( புல்
மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட்
( தோசை,வடக்கிந்திய
உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால்
ரோடு ( நெய் பொங்கல்,
முஷ்ரூம் பிரியாணி,பன்
அல்வா )
இவை அனைத்தையும்
விட மதுரையின் சைவ
மாலை நேர
உணவகங்களின்
முன்னோடி -
முருகன் இட்லி கடை,
இம்மையில்
நன்மை தருவார்
கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த
இட்லி )
மதுரையின் தனிப்பட்ட
சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ்
லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால்
ரோடு,தங்க ரீகல்
எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட
சிறந்தது )
சங்கர் காபி,
அண்ணா பஸ்
ஸ்டாண்ட்- உழுந்த
வடை
ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய
வெள்ளாளர்
தெரு,பெரியார் பஸ்
ஸ்டான்ட் அருகில் ,
ஆர்த்தி ஹோட்டல்
ரோட்டில்
சென்று இடப்புறம்
செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம்
தோசை,காலி ப்ளவர்
தோசை....
விசாலம் காபி-
கோரிப்பாளையம் ,
தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா"
காபி என்றழைக்கும்
அளவு மீண்டும்
மீண்டும் பருக
தூண்டுவது
பெயர் தெரியாத அந்த
இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ்
மேம்பாலம் கீழே -
இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும்
விட
மதுரையின் பிரத்தியேக
குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்-
ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க
மதுரை உணவின்
சுவை
உலகெங்கும் புகழ்
பரப்புவோம்...
ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக்
கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ், தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன்வறுவல் நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ், தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ், தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன்
கோலா )
4- அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல்
- மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை -
புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் -
மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி மட்டன் பிரியாணி
சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ், சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு, மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம்
பாயா )
2- குமார் மெஸ், தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர்
மஹால் கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )
சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்-
திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன்
( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால்
ரோடு ( கிங்
பரோட்டா,பட்டர்
சிக்கன் )
பஞ்சாபி தாபா -
தல்லாகுளம் ( பட்டர்
நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை -
ஆவின் சிக்னல்
( மதுரையின் சிறந்த
பரோட்டா )
போஸ் கடை-
அண்ணா பஸ்
ஸ்டாண்ட் ( பகலில்
கறிக்கடை,இரவில்
இட்லி கடை )
சிறந்த சைவ
உணவகங்கள் மதிய
உணவு..!
கணேஷ் மெஸ்,
மேலபெருமாள்
மேஸ்திரி ரோடு ( புல்
மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட்
( தோசை,வடக்கிந்திய
உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால்
ரோடு ( நெய் பொங்கல்,
முஷ்ரூம் பிரியாணி,பன்
அல்வா )
இவை அனைத்தையும்
விட மதுரையின் சைவ
மாலை நேர
உணவகங்களின்
முன்னோடி -
முருகன் இட்லி கடை,
இம்மையில்
நன்மை தருவார்
கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த
இட்லி )
மதுரையின் தனிப்பட்ட
சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ்
லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால்
ரோடு,தங்க ரீகல்
எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட
சிறந்தது )
சங்கர் காபி,
அண்ணா பஸ்
ஸ்டாண்ட்- உழுந்த
வடை
ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய
வெள்ளாளர்
தெரு,பெரியார் பஸ்
ஸ்டான்ட் அருகில் ,
ஆர்த்தி ஹோட்டல்
ரோட்டில்
சென்று இடப்புறம்
செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம்
தோசை,காலி ப்ளவர்
தோசை....
விசாலம் காபி-
கோரிப்பாளையம் ,
தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா"
காபி என்றழைக்கும்
அளவு மீண்டும்
மீண்டும் பருக
தூண்டுவது
பெயர் தெரியாத அந்த
இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ்
மேம்பாலம் கீழே -
இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும்
விட
மதுரையின் பிரத்தியேக
குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்-
ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க
மதுரை உணவின்
சுவை
உலகெங்கும் புகழ்
பரப்புவோம்...
Saturday, February 01, 2014
ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !!!
ஜெயிக்க வைக்கும் ஜீவாமிர்தம் !
ரோ பட்ஜெட்’ விவசாயத்தின் முக்கிய இடுபொருட்கள்... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இரண்டும்தான். விவசாயிகளே எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இந்த இடுபொருட்களை, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பயன்படுத்தி, கண்கூடாக பலன்களை உணர்ந்திருக்கிறார்கள். அத்தகையோரில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து-ஈஸ்வரி தம்பதிக்கும் இடமுண்டு. இவர்கள், மரப்பயிர்களுக்கு இந்த இடுபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பத்து ஏக்கரில் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் இவர்களின் பண்ணையில், காலைவேளையில் கால் வைத்தோம். வாய் நிறைந்த சிரிப்புடன் வரவேற்று உபசரித்தனர் தம்பதியர். வேப்பமர நிழலில் கட்டியிருந்த நாட்டுமாடுகளுக்கு வைக்கோல் போட்டபடியே பேச ஆரம்பித்தார், புரவிமுத்து.
''எம்பேரு முத்துசாமிங்க. சொந்த ஊரு கொடுமுடி பக்கம் இருக்கிற புரவிப்பாளையம். 15 வருஷமா இங்க குடியிருக்கேன். 'புரவிப்பாளையம் முத்துசாமி’னு அக்கம்பக்கம் உள்ளவங்க கூப்பிட ஆரம்பிக்க... அது சுருங்கி 'புரவிமுத்து'னு ஆயிடுச்சு'' என்று பெயர் விளக்கம் கொடுத்தவர்,
''காலேஜ்ல படிக்கறப்பவே இயற்கை மீது ஆர்வம் அதிகம். லீவு விட்டா காடு, மலைனு சுத்திட்டே இருப்பேன். படிச்சு முடிச்சு விவசாயத்துக்கு வந்தேன். 'கொடுமுடி டாக்டர்’ நடராஜன் மூலமா பஞ்சகவ்யா பத்தித் தெரிஞ்சிட்டேன். தொடர்ந்து, நம்மாழ்வார் அய்யா கூட்டங்கள்லயும் கலந்துகிட்டது மூலமா இயற்கை வேளாண்மை பத்தியும் மரம் வளர்க்குறது பத்தியும் தெரிஞ்சிட்டேன்.
சிலிர்க்க வைத்த ஜீரோ பட்ஜெட் !
அதுக்கப்பறம் 10 ஏக்கர் நிலத்தையும் முழுக்க முழுக்க இயற்கைப் பண்ணையா மாத்திட்டோம். அந்த சமயத்துல 'பசுமை விகடன்’ மூலமா திண்டுக்கல்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல நானும் மனைவியும் கலந்துக்கிட்டோம். சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்... எங்களை ரொம்ப ஈர்த்துச்சு. தொடர்ந்து ஈரோடு, கோவையில நடந்த அவரோட வகுப்புலயும் கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அதுக்கப்பறம் எங்க பண்ணைய முழுசா ஜீரோ பட்ஜெட்டுக்கு மாத்திட்டோம்.
முதல்படியா கலப்பின மாடுகள் அத்தனையையும் வித்துட்டு, நாட்டுமாடுகளை வாங்கினோம். இப்ப 6 நாட்டு மாடுகளும், 2 கன்னுக்குட்டிகளும் இருக்கு. அதுகளோட கழிவுகளை வெச்சுதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயார் பண்ணி பயிர்களுக்குக் கொடுக்கிறோம்'' என்ற புரவிமுத்துவைத் தொடர்ந்தார், ஈஸ்வரி.
மழை ஈர்ப்பு மையம் !
''இந்த 10 ஏக்கருக்கும் கிணத்துப் பாசனம்தான். 5 ஏக்கர்ல பென்சில், பெருமரம், வாகை, பூவரசு, மலைவேம்பு, காயா, மகோகனி, இலவு, வேம்பு...னு 2 ஆயிரம் மரங்கள் இருக்கு. அதையெல்லாம் நட்டு நாலு வருஷம் ஆச்சு. 5 ஏக்கர்ல சப்போட்டா, மா இருக்கு. இந்த மரங்கள் ஆறு வருஷமா பலன் கொடுத்திட்டிருக்கு. இந்தப் பண்ணைக்கு நாங்க 'கனிச்சோலை’னு பேர் வெச்சுருக்கோம். மரங்கள் நிறைய இருக்கறதால மழை ஈர்ப்பு மையமாவும் இது இருக்கு. மழை பெய்யுற சமயத்துல மத்த இடத்துல பெய்யுறதைவிட இங்க கொஞ்சம் அதிகமாவே பெய்றதை நாங்க கண் கூடா பாத்துருக்கோம்.
மரங்கள் நடவு செஞ்சு 2 வருஷம் வரைக்கும் வாரம் ரெண்டு தண்ணி கொடுப்போம். ஒவ்வொரு முறையும் ஜீவாமிர்தத்தை பாசனத்துல கலந்துடுவோம். அப்படிக் கொடுக்க ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே மண் பொலபொலப்பாகி, ஈரப்பதம் அதிகமாச்சு. பாலேக்கர் சொன்னது மாதிரியே மண்ணுக்கு அடியில இருந்த மண்புழுக்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிச்சது. வறட்சியிலகூட மரங்கள் வாடிப் போறதில்லை. 3-ம் வருஷத்துல இருந்து 15 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுத்துட்டிருக்கோம்.
ஊட்டம் கொடுக்கும் கனஜீவாமிர்தம் !
ஜீவாமிர்தத்தைவிட அதிக வீரியமா செயல்படுறது, கனஜீவாமிர்தம். பொதுவா, மானாவாரி விவசாயத்துலதான் இதைப் பயன்படுத்துவாங்க. ஆனா, நாங்க எங்க தோட்டத்துல இருக்கற மரங்களுக்கும், பழப்பயிர்களுக்கும் மாதம் ஒரு முறை அரை கிலோ கனஜீவாமிர்தம் கொடுக்குறோம். வறட்சியால பாதிப்பு, வேர் சம்பந்தமான நோய்கள்னு எதுவும் பாதிக்காம தடுத்து, மரங்களுக்கு ஊட்டம் கொடுக்குறது கனஜீவாமிர்தம்தான்'' என்றார் ஈஸ்வரி.
பூச்சிகள் தொல்லை இல்லை!
மீண்டும் பேச்சை ஆரம்பித்த புரவிமுத்து, ''பழப்பயிர்களுக்கும் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ரெண்டையும் 15 நாள் இடைவெளியில மரத்துக்கு 5 லிட்டர் வீதம் கொடுக்குறோம். பூக்கும் பருவத்துல 10 லிட்டர் தண்ணியில 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து மரங்க மேல தெளிப்போம். இதனால பிஞ்சுக உதிராம, சேதாரம் இல்லாம காய்ச்சு பழுத்து பலன் தருது. பழங்களை சேதப்படுத்திற வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிக அறவே வர்றது இல்ல'' என்ற புரவிமுத்து, நிறைவாக,
ஜீரோ பட்ஜெட் விவசாயம்ங்கிறதால எங்கள் தோட்டத்தில் இருக்கிற வேலையை நாங்களே செஞ்சிடுவோம். இடுபொருள் செலவும் இல்லை. ஆக எல்லாமே வரவுதான். ''பழமரங்கள் மூலம் சீசனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. 5 ஏக்கர் நிலத்துல இருக்கிற மரங்களை 6 வருஷத்துக்குப் பிறகு வெட்டுறப்போ... குறைந்தபட்சம்
2 ஆயிரம் டன் தேறும். விறகுக்கு வித்தாக்கூட டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய்னு இப்ப இருக்கற நிலவரப்படி 60 லட்சம் ரூபாய் வருமானம் நிச்சயம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
நாட்டு மாடுகள் பற்றிப் பேசிய ஈஸ்வரி, ''நாட்டு மாடுகள்ல பால் குறைவாத்தான் கிடைக்கும். கன்னுக்குட்டிக குடிச்சதுபோக, வீட்டுத்தேவைக்கே அந்தப்பால் சரியா போயிடும். அதனால... இயற்கை இடுபொருள் தயாரிக்க மட்டுமே நாட்டு மாடுங்கறது நெருடலா இருந்துச்சு. ஆனா, அதுக்கும் பசுமை விகடன் மூலமாவே மாற்று வழி கிடைச்சுடுச்சு. இப்ப நாட்டு மாடு வருமானம் கொடுக்குற மாடாயிடுச்சு'' என்று குஷியோடு சொன்னவர், அந்த நுட்பங்களையும் சொன்னார். அது-
''சேலத்துல இருக்கிற சுரபி கோசாலையில நாட்டு மாடுகளோட கோமியம், சாணத்தைப் பயன்படுத்தி, அர்க், சாம்பிராணி, விபூதி, ஷாம்பூ, சோப்புக்கட்டி, கொசுவத்திகளைத் தயாரிச்சு விக்கிறாங்கனு பசுமை விகடன்ல ஒரு செய்தி வந்துருந்துச்சு. அந்த கோசாலைக்குப் போய், தயாரிப்பு முறைகளைக் கத்துக்கிட்டு வந்தோம். 2 வருஷமா நாங்களும் தயாரிச்சு வித்துக்கிட்டிருக்கோம். இதன் மூலமா மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. அதனால, நாட்டுமாடுகள்ல பால் வருமானம் இல்லையேங்கிற வருத்தம் சுத்தமா போயிடுச்சு. செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் வளர்த்து வித்துக்கிட்டுருக்கோம். அதுலயும் தனியா வருமானம் கிடைக்குது.''
-- நன்றி விகடன்
ரோ பட்ஜெட்’ விவசாயத்தின் முக்கிய இடுபொருட்கள்... ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இரண்டும்தான். விவசாயிகளே எளிதில் தயாரித்துக் கொள்ளக்கூடிய இந்த இடுபொருட்களை, ஜீரோ பட்ஜெட் விவசாயிகள் பயன்படுத்தி, கண்கூடாக பலன்களை உணர்ந்திருக்கிறார்கள். அத்தகையோரில், திருப்பூர் மாவட்டம், முத்தூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து-ஈஸ்வரி தம்பதிக்கும் இடமுண்டு. இவர்கள், மரப்பயிர்களுக்கு இந்த இடுபொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
பத்து ஏக்கரில் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் இவர்களின் பண்ணையில், காலைவேளையில் கால் வைத்தோம். வாய் நிறைந்த சிரிப்புடன் வரவேற்று உபசரித்தனர் தம்பதியர். வேப்பமர நிழலில் கட்டியிருந்த நாட்டுமாடுகளுக்கு வைக்கோல் போட்டபடியே பேச ஆரம்பித்தார், புரவிமுத்து.
''எம்பேரு முத்துசாமிங்க. சொந்த ஊரு கொடுமுடி பக்கம் இருக்கிற புரவிப்பாளையம். 15 வருஷமா இங்க குடியிருக்கேன். 'புரவிப்பாளையம் முத்துசாமி’னு அக்கம்பக்கம் உள்ளவங்க கூப்பிட ஆரம்பிக்க... அது சுருங்கி 'புரவிமுத்து'னு ஆயிடுச்சு'' என்று பெயர் விளக்கம் கொடுத்தவர்,
''காலேஜ்ல படிக்கறப்பவே இயற்கை மீது ஆர்வம் அதிகம். லீவு விட்டா காடு, மலைனு சுத்திட்டே இருப்பேன். படிச்சு முடிச்சு விவசாயத்துக்கு வந்தேன். 'கொடுமுடி டாக்டர்’ நடராஜன் மூலமா பஞ்சகவ்யா பத்தித் தெரிஞ்சிட்டேன். தொடர்ந்து, நம்மாழ்வார் அய்யா கூட்டங்கள்லயும் கலந்துகிட்டது மூலமா இயற்கை வேளாண்மை பத்தியும் மரம் வளர்க்குறது பத்தியும் தெரிஞ்சிட்டேன்.
சிலிர்க்க வைத்த ஜீரோ பட்ஜெட் !
அதுக்கப்பறம் 10 ஏக்கர் நிலத்தையும் முழுக்க முழுக்க இயற்கைப் பண்ணையா மாத்திட்டோம். அந்த சமயத்துல 'பசுமை விகடன்’ மூலமா திண்டுக்கல்ல நடந்த ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புல நானும் மனைவியும் கலந்துக்கிட்டோம். சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் சித்தாந்தம்... எங்களை ரொம்ப ஈர்த்துச்சு. தொடர்ந்து ஈரோடு, கோவையில நடந்த அவரோட வகுப்புலயும் கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துக்கிட்டோம். அதுக்கப்பறம் எங்க பண்ணைய முழுசா ஜீரோ பட்ஜெட்டுக்கு மாத்திட்டோம்.
முதல்படியா கலப்பின மாடுகள் அத்தனையையும் வித்துட்டு, நாட்டுமாடுகளை வாங்கினோம். இப்ப 6 நாட்டு மாடுகளும், 2 கன்னுக்குட்டிகளும் இருக்கு. அதுகளோட கழிவுகளை வெச்சுதான் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு தயார் பண்ணி பயிர்களுக்குக் கொடுக்கிறோம்'' என்ற புரவிமுத்துவைத் தொடர்ந்தார், ஈஸ்வரி.
மழை ஈர்ப்பு மையம் !
''இந்த 10 ஏக்கருக்கும் கிணத்துப் பாசனம்தான். 5 ஏக்கர்ல பென்சில், பெருமரம், வாகை, பூவரசு, மலைவேம்பு, காயா, மகோகனி, இலவு, வேம்பு...னு 2 ஆயிரம் மரங்கள் இருக்கு. அதையெல்லாம் நட்டு நாலு வருஷம் ஆச்சு. 5 ஏக்கர்ல சப்போட்டா, மா இருக்கு. இந்த மரங்கள் ஆறு வருஷமா பலன் கொடுத்திட்டிருக்கு. இந்தப் பண்ணைக்கு நாங்க 'கனிச்சோலை’னு பேர் வெச்சுருக்கோம். மரங்கள் நிறைய இருக்கறதால மழை ஈர்ப்பு மையமாவும் இது இருக்கு. மழை பெய்யுற சமயத்துல மத்த இடத்துல பெய்யுறதைவிட இங்க கொஞ்சம் அதிகமாவே பெய்றதை நாங்க கண் கூடா பாத்துருக்கோம்.
மரங்கள் நடவு செஞ்சு 2 வருஷம் வரைக்கும் வாரம் ரெண்டு தண்ணி கொடுப்போம். ஒவ்வொரு முறையும் ஜீவாமிர்தத்தை பாசனத்துல கலந்துடுவோம். அப்படிக் கொடுக்க ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே மண் பொலபொலப்பாகி, ஈரப்பதம் அதிகமாச்சு. பாலேக்கர் சொன்னது மாதிரியே மண்ணுக்கு அடியில இருந்த மண்புழுக்கள் எல்லாம் மேலே வர ஆரம்பிச்சது. வறட்சியிலகூட மரங்கள் வாடிப் போறதில்லை. 3-ம் வருஷத்துல இருந்து 15 நாளைக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுத்துட்டிருக்கோம்.
ஊட்டம் கொடுக்கும் கனஜீவாமிர்தம் !
ஜீவாமிர்தத்தைவிட அதிக வீரியமா செயல்படுறது, கனஜீவாமிர்தம். பொதுவா, மானாவாரி விவசாயத்துலதான் இதைப் பயன்படுத்துவாங்க. ஆனா, நாங்க எங்க தோட்டத்துல இருக்கற மரங்களுக்கும், பழப்பயிர்களுக்கும் மாதம் ஒரு முறை அரை கிலோ கனஜீவாமிர்தம் கொடுக்குறோம். வறட்சியால பாதிப்பு, வேர் சம்பந்தமான நோய்கள்னு எதுவும் பாதிக்காம தடுத்து, மரங்களுக்கு ஊட்டம் கொடுக்குறது கனஜீவாமிர்தம்தான்'' என்றார் ஈஸ்வரி.
பூச்சிகள் தொல்லை இல்லை!
மீண்டும் பேச்சை ஆரம்பித்த புரவிமுத்து, ''பழப்பயிர்களுக்கும் ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ரெண்டையும் 15 நாள் இடைவெளியில மரத்துக்கு 5 லிட்டர் வீதம் கொடுக்குறோம். பூக்கும் பருவத்துல 10 லிட்டர் தண்ணியில 2 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து மரங்க மேல தெளிப்போம். இதனால பிஞ்சுக உதிராம, சேதாரம் இல்லாம காய்ச்சு பழுத்து பலன் தருது. பழங்களை சேதப்படுத்திற வெள்ளை ஈ, சாறு உறிஞ்சும் பூச்சிக அறவே வர்றது இல்ல'' என்ற புரவிமுத்து, நிறைவாக,
ஜீரோ பட்ஜெட் விவசாயம்ங்கிறதால எங்கள் தோட்டத்தில் இருக்கிற வேலையை நாங்களே செஞ்சிடுவோம். இடுபொருள் செலவும் இல்லை. ஆக எல்லாமே வரவுதான். ''பழமரங்கள் மூலம் சீசனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. 5 ஏக்கர் நிலத்துல இருக்கிற மரங்களை 6 வருஷத்துக்குப் பிறகு வெட்டுறப்போ... குறைந்தபட்சம்
2 ஆயிரம் டன் தேறும். விறகுக்கு வித்தாக்கூட டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய்னு இப்ப இருக்கற நிலவரப்படி 60 லட்சம் ரூபாய் வருமானம் நிச்சயம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
நாட்டு மாடுகள் பற்றிப் பேசிய ஈஸ்வரி, ''நாட்டு மாடுகள்ல பால் குறைவாத்தான் கிடைக்கும். கன்னுக்குட்டிக குடிச்சதுபோக, வீட்டுத்தேவைக்கே அந்தப்பால் சரியா போயிடும். அதனால... இயற்கை இடுபொருள் தயாரிக்க மட்டுமே நாட்டு மாடுங்கறது நெருடலா இருந்துச்சு. ஆனா, அதுக்கும் பசுமை விகடன் மூலமாவே மாற்று வழி கிடைச்சுடுச்சு. இப்ப நாட்டு மாடு வருமானம் கொடுக்குற மாடாயிடுச்சு'' என்று குஷியோடு சொன்னவர், அந்த நுட்பங்களையும் சொன்னார். அது-
''சேலத்துல இருக்கிற சுரபி கோசாலையில நாட்டு மாடுகளோட கோமியம், சாணத்தைப் பயன்படுத்தி, அர்க், சாம்பிராணி, விபூதி, ஷாம்பூ, சோப்புக்கட்டி, கொசுவத்திகளைத் தயாரிச்சு விக்கிறாங்கனு பசுமை விகடன்ல ஒரு செய்தி வந்துருந்துச்சு. அந்த கோசாலைக்குப் போய், தயாரிப்பு முறைகளைக் கத்துக்கிட்டு வந்தோம். 2 வருஷமா நாங்களும் தயாரிச்சு வித்துக்கிட்டிருக்கோம். இதன் மூலமா மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. அதனால, நாட்டுமாடுகள்ல பால் வருமானம் இல்லையேங்கிற வருத்தம் சுத்தமா போயிடுச்சு. செம்மறி ஆட்டுக் குட்டிகளையும் வளர்த்து வித்துக்கிட்டுருக்கோம். அதுலயும் தனியா வருமானம் கிடைக்குது.''
-- நன்றி விகடன்
Monday, January 27, 2014
மண் புழு உரம் - லட்ச கணக்குல பணம் வரும்...
மண் புழு உரம் - லட்ச கணக்குல பணம் வரும்...
பொன்னு சிரிக்கனுமா நகைய போடு, மண்னு செழிக்கனும்னா (மண்) புழுவ போடுனு... யார் சொன்னதுனு கேக்குறீங்களா? நான்தான்யா சொல்லுறேன்... அனுபவம் அய்யா அனுபவம்.. இது என் வாழ்க்கையில் நடந்த நிருபனம்.
எங்கள் குழுவினர் தொழில் துவங்க யோசித்தபோது, இடமும், மூலப்பொருளும் இலவசமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம்.
அதற்கேற்ப
காய்கனி மார்க்கெட்டில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி, அதில் செய்ய ஏதுவான
தொழிலை யோசித்தபோது, காய்கனி மார்க்கெட்டில் கழிவுகளாகக் கொட்டப்படும்
காய்கனி குப்பைகளை சேகரித்து, அதன் மூலம் மண் புழு உரம் தயாரிக்கத்
திட்டமிட்டோம்.
இத்தொழிலுக்குத் தேவையான மாட்டுச்சாணம் மற்றும் மண்புழுக்களை மட்டும் வெளியே வாங்கினோம்.
காய்கறிக்கழிவு,
மாட்டுச்சாணம், செம்மண், மண்புழு கலவையில் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர்
தெளிக்க வேண்டும், ஒரு மாதத்திற்குப் பின்னர் வாரம் ஒரு முறை மேலாகப்
படியும் உரத்தை அள்ளி சேகரிக்க வேண்டும்.
உழைப்பும்
பெரிய அளவில் இல்லை. 3 மாதத்தில் மண் புழு உரம் மற்றும் மண்புழுக்கள்
உற்பத்தியாகி விற்பனைக்கு தயாராகியது. அவற்றை பாக்கெட் போட்டு கடைக்கு
விற்கிறோம். விவசாயிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.
ஷெட்,
காய்கறிக்கழிவுகள் ஆகியவை இலவசமாகக் கிடைத்ததால், சாணம், செம்மண்,
மண்புழுக்கள் மற்றும் பராமரிப்புச்செலவு மட்டும் தான். அதற்கு ரூ.10 ஆயிரம்
செலவானது.
உரம்
மற்றும் மண்புழுக்கள் விற்றதில் ரூ. 24 ஆயிரம் கிடைத்தது. 3 மாதத்தில்
ரூ.14 ஆயிரம் லாபம். இதே போல் கூடுதலாக ஷெட் அமைத்து உற்பத்தி செய்தால் பல
மடங்கு லாபம் பெருகும் வாய்ப்புள்ளது.
ஒரு செட்டில் ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கிறது.
இதன்
மதிப்பு ரூ. 22,500. மண்புழுக்கள் 5 ஆயிரம் கிடைக்கிறது. இதில் சிறியவை 50
பைசாவுக்கும், பெரியவை ஜீ1க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சராசரியாக ரூ. 4
ஆயிரம். மொத்தம் ரூ. 26,500.
இதில் உற்பத்திச் செலவு ரூ. 12 ஆயிரம் போக, லாபம் ரூ.14,500.
இதில் கட்டுமானச் செலவுக்கான தொகையை மீட்க ரூ. 2,500 ஒதுக்கியது போக,
12 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
மண்
புழு உரத்தின் தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்க,
இடப்பரப்பளவை அதிகரித்து குறைந்தபட்சம் 3 ஷெட் போட்டு மண் புழு உற்பத்தி
செய்வதன் மூலம் 3 மாதத்தில் ரூ.36 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
ஒரு
ஆண்டில் ரூ. 1.44 லட்சம் லாபம் கிடைக்கும். ஒருவரே இத்தொழிலுக்குப்
போதுமென்பதால், தனி நபருக்கு மாதம் ரூ.12 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
இத்தனைக்கும் இந்த தொழிலிலேயே முழுமையாக ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.
‘சைடு' தொழிலாகக்கூட செய்யலாம். இடத்தின் அளவை கூட்ட, கூட்ட தொழிற்சாலை
போன்று அமைத்து, லட்சக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம்.
சரியான
முறையில் மார்க்கெட்டிங் செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் விற்கலாம்.
எதிர்காலத்தில் இதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இடம் நிறைய
இருந்தால், அதற்கேற்ப மண் புழு உரத் தயாரிப்பை அதிகரிக்க ஷெட்டை
விரிவுபடுத்தலாம். அதற்கு தகுந்தபடி கைநிறைய பணம் கிடைக்கும்.
மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?
செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம்.
விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.
மூலதன செலவு என்ன?
கட்டமைப்புகள்:
சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.
10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி.
அதைச்சுற்றி இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம்.
உற்பத்திச் செலவு:
இதன்
மூலம் 2 டன் பரப்புள்ள மண், சாணப்பரப்பில், கல், செத்தை கழிவுகள் போக
ஒன்றரை டன் மண்புழு உரம் கிடைக்கும். இதற்கிடையில், மண் புழுக்கள்
அனைத்தும் முட்டையிட்டு, சம எண்ணிக்கையில் புதிய மண்புழுக்கள்
உருவாகியிருக்கும்.
மூலப்பொருள் எங்கே கிடைக்கும்?
செம்மண் அல்லது கரிசல் மண்ணை விவசாய நிலங்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். சாணத்தை கால்நடை வளர்ப்போரிடம் வாங்கலாம்.
விவசாயிகள் தங்கள் நிலப்பகுதியில் தோண்டிய குழியில் கழிவுகளையும் மண்ணையும் போட்டு மக்க வைத்திருப்பார்கள், அதை வாங்கிக் கொள்ளலாம். மண்புழுக்கள் ஏற்கனவே மண்புழு உரம் தயாரிப்பவர்களிடம் கிடைக்கும்.
மூலதன செலவு என்ன?
கட்டமைப்புகள்:
சொந்தமாகவோ, வாடகைக்கோ ஒரு சென்ட் இடம்.
10க்கு 15 அடி நீள, அகலம், 4 அடி உயரமுள்ள தொட்டி.
அதைச்சுற்றி இடுப்பளவு காம்பவுண்ட் சுவர். மேற்கூரை ஷெட்.(ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கூரை.) கட்டமைப்புக்கான செலவு ஒரு ஷெட்டுக்கு ரூ.50 ஆயிரம்.
உற்பத்திச் செலவு:
- அடியில் பரப்ப செம்மண் அரை டன் ரூ. 500.
- காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய மண் ஒரு டன் ரூ. 1500.
- மாட்டுச்சாணம் ஒரு டன் ரூ.3 ஆயிரம்.
- 5 ஆயிரம் எண்ணிக்கையுள்ள மண்புழுக்கள் ரூ. 5 ஆயிரம்
- பராமரிப்பு கூலி ரூ. 500.
- இடம் வாடகை 3 மாதத்திற்கு அதிகபட்சம் ரூ. 1500
- மூலதனச் செலவு ரூ. 62 ஆயிரம்.
- இத்தொழிலுக்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது.
தயாரிப்பது எப்படி?
மண்
புழு உரம் அமைக்கும் தொட்டியில் அரை டன் செம்மண், அதற்கு மேல் ஒரு டன்
காய்கறிக்கழிவு அல்லது மக்கிய மண்ணை பரப்ப வேண்டும். 20 நாள் கழித்து,
அதன் மேல் ஒரு டன் மாட்டுச்சாணம் கொட்ட வேண்டும். அடுத்த 10 நாளில்
மாட்டுச்சாணத்தின் மேல் 5 ஆயிரம் மண் புழுக்களை விட வேண்டும். மேல்
பகுதியில் தேங்காய் நார் பரப்பி,
2 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
ஒரு
மாதத்தில் மேலிருந்து மண் புழுக்கள் உள்ளே ஊடுருவும். மேலேயுள்ள மண்ணைச்
சாப்பிட்டு, வெளியாகும் கழிவுகள் உரங்களாக மேல் பகுதியில் படியும். ஒரு
மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை மேற்புற மண், அதாவது மண்புழு உரத்தை அள்ள
வேண்டும். படிப்படியாக மேற்புறம் அனைத்தும் மண்புழு கழிவுகளாக, உரமாக வந்து
கொண்டிருக்கும். 3 மாத நிறைவில் கீழுள்ள செம்மண் பரப்புக்கு மண்புழுக்கள்
சென்று விடும்.
நண்பேன்டா....
விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும்
மண்புழு, உலகில் 120 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகை
மண்புழுவும் வெவ்வேறு விதமான தட்பவெப்ப சூழலில்,வெவ்வேறு ஆழத்தில் 3
ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆண், பெண் என்ற தனிப்பால் இல்லை. அனைத்து
புழுக்களுமே 45 நாட்களுக்கு ஒரு முறை 30 முட்டைகள் வரை இடும்.
‘யுஜினத்Õ வகை மண்புழுக்கள் இந்தியாவில்
அதிகளவில் உள்ளது. 15 செமீ முதல் 20 செமீ நீளமுடையது. ஒரு கிராம்
எடையுள்ளது. காய்கறி, வைக்கோல், ஈரவைக்கோல், காய்ந்த சருகுகள், சாணஎரு,
கழிவுஎரு, கோழிஎரு உள்ளிட்டவைகள் மண்புழுக்களுக்கு சிறந்த உணவாகும்.
மண்புழுக்களுக்கு உணவை விட தண்ணீர் மிகவும்
அவசியம். உண்ணும் உணவில் 30 முதல் 40 சதவீதம் வரை தண்ணீர் இருக்க வேண்டும்.
பொதுவாக பகல் நேரத்தைவிட இரவில்தான் அதிகமாக சுற்றி திரியக்கூடியது .
சூரியக்கதிர்கள் இதன் மீது நேரடியாக படக்கூடாது. சூரியகதிர்கள் பட்டால்
உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்துவிடும்.
விளைநிலங்களுக்கு பயன்படுத்தப்படும்
மண்புழுக்களின் கழிவுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களும்,
பாஸ்பேட்டை கரைக்கக் கூடிய பாக்டீரியாக்களும் அதிகமாக உள்ளன. மேலும்
மண்புழு கழிவில்(மண்புழு உரம்) இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீசு
போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் அதிக அளவில் உள்ளதோடு ஹார்மோன்கள்,
வைட்டமின்களும் உள்ளன. இதனால் மண்புழு உரமிடப்பட்ட பயிர்கள் நன்றாக
வளர்வதோடு விளைச்சலும் அதிகரிக்கிறது.
மேலும் இதன்கழிவுகள் மண்ணில் வாழும் பல
வகையான நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றது. இது தவிர மண்புழு
கழிவுக்கு மண்ணின் ஈர தன்மையை நிலை நிறுத்தும் திறன் அதிகம். வாரத்திற்கு
மூன்று முறை தண்ணீர் பாய்ச்சுவதாக இருந்தால் மண்புழு உரம் இடப்பட்ட
நிலங்களுக்கு இரண்டு முறை பாய்ச்சினாலே போதும் என்கின்றனர்
வேளாண்துறையினர்.
சந்தை வாய்ப்பு:

இயற்கை உரத்தில் உற்பத்தியாகும் காய்கறி
மற்றும் பயிர்களுக்கு மவுசு இருப்பதால், மண் புழு உரத்துக்கு தேவை
அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களின் மண் வளத்தை மீட்கவும் மண் புழு
உரங்களையே பரிந்துரைக்கின்றனர். சாதாரண நிலங்களுக்கு மட்டுமல்லாமல்,
மலைப்பயிரான தேயிலை, காபித் தோட்டங்களுக்கும்கூட மண் புழு உரங்களை
வாங்கிச்செல்கின்றனர். இதனால் நிலங்களுக்கு டன் கணக்கில் மண் புழு உரம்
தேவைப்படுகிறது.
வீடுகளில் பூந்தோட்டம் அமைப்பவர்களும்,
தொட்டிகளில் அழகுச் செடி வளர்ப்பவர்களுக்கும், பாக்கெட்களில் போட்டுள்ள
மண்புழு உரத்தைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது. அதற்காக ஒரு கிலோ, 2 கிலோ
அளவில் பாக்கெட்களை வாங்க நர்சரி மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை
அணுகுகிறார்கள். அங்கும் சப்ளை செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு:
Friday, October 25, 2013
50 places to visit
http://www.thrillophilia.com/blog/50-places-to-visit-in-india-before-you-turn-30/
Tuesday, September 10, 2013
நல்வருமானம் தரும் நன்னீர் இறால்!
ஒரு ஏக்கர்... 100 நாள்... 2,00,000
நல்வருமானம் தரும் நன்னீர் இறால்!
கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும்
முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது
உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும்
அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே...
பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக...
குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி
வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.
தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
தஞ்சாவூர்-பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசனின்
இறால் பண்ணையை வலம் வந்தோம். ''எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம்,
கடம்பங்குடி. அங்க, 30 ஏக்கர்ல நெல், கரும்பு சாகுபடி செஞ்சுட்டு
இருந்தோம். தொடர்ச்சியா நஷ்டம். அதனால, நிலத்தை குத்தகைக்கு விட்டுட்டு,
குடும்பத்தோடு தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை
செய்துட்டிருக்கேன்.
எங்க ஊர்ல, 2003-ம் வருசம் வரைக்கும் நன்னீர் இறால்
வளர்த்தேன். அது நல்ல லாபமான தொழிலா இருந்தாலும்... அந்த சமயத்துல, இறால்
குஞ்சுகளை உற்பத்தி செய்யுற நிறுவனங்கள் அதிகமா இல்ல. அதனால,
குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே... இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போ
சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில இறால் குஞ்சு பொரிக்கிற நிறுவனங்கள்
நிறைய இருக்கு. அதனால, குஞ்சுகள் தாராளமா கிடைக்குது. இந்த விஷயத்தைக்
கேள்விப்பட்டதுமே... மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருஷமா
இறால் வளர்த்துட்டுருக்கேன்.

இறால் விற்பனைக்காக பெருசா கவலைப்படத் தேவையில்ல.
நாகப்பட்டினம், சென்னையில இருக்கற கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு
வாரியத்துல சொல்லி வெச்சுட்டோம்னா... ஏற்றுமதி செய்றவங்க தேடி வந்து
வாங்கிக்கிட்டுப் போயிடுறாங்க. உள்ளூர் மார்க்கெட்லயும் நல்ல விற்பனை
இருக்கு'' என்று முன்னுரை கொடுத்த சீனிவாசன், தொடர்ந்தார்.
100 நாட்களில் வருமானம்!
''நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணியைவிட,
இறால் வளர்ப்புக்குக் குறைவான தண்ணிதான் தேவைப்படும். இதுல நூறு நாள்ல
லாபம் பார்த்துடலாம். ஒரு ஏக்கருக்கு வருஷத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்னு
குத்தகைக்கு எடுத்துருக்கேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர். இதுல 7
ஏக்கர் நீர்ப் பரப்பு. அதுல, 13 குட்டைகள் இருக்கு. இங்க, நன்னீர்,
கடல்நீர் ரெண்டுலயும் வளரக்கூடிய 'லிட்டோபினஸ் வெனாமி’ங்கிற ரக இறாலைத்தான்
வளர்க்கிறேன்'' என்ற சீனிவாசன், ஒரு ஏக்கர் நீர்ப் பரப்பில் நன்னீர் இறால்
வளர்க்கும் முறை பற்றி சொன்னார். அதை அப்படியே பாடமாகத்
தொகுத்திருக்கிறோம்.

சூரிய வெளிச்சம் அவசியம்!
'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க
வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை
இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க
திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம்.
அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை
நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது
அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை
அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால்
குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று,
இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி
நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச்.
முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப்
பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால், கார-அமிலத்தன்மையைப்
பரிசோதிக்க வேண்டியதில்லை.

நான்கு வேளைகளில் தீவனம்!
குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டி, 15 நாட்கள்
வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100
கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்துக்கு தண்ணீர்
நிறுத்தி... அதில், 50 கிலோ ஈரச் சாணம்,
5 கிலோ தாதுப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப்
பயிற்சி மையங்களிலும், கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும்.
கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி
உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி
உயரத்துக்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு
லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ
இறால் தீவனத்தையும் போட வேண்டும்.இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.

தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி,
மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு
பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே
முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப்
போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று
தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு
கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன்
கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை,
நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.
தீவனம்... கவனம்!
குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ; 3-ம் நாள் 2.4
கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும்.
8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க
வேண்டும். 16-ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம்
தீவனத்தையும்; 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம்
தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க
வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட
வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம்
எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80 ஆயிரம் குஞ்சுகள் அளவுக்கு
உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7
சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ
தீவனம் போட வேண்டும்.

38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும்.
மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம்
போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்... 5%, 4%, 3%, 2% என தீவனத்தைக்
குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை
கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க
வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில்
கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி
எடையை எளிதாகக் கணித்து விடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார்
ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.
ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு
இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம்
முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள்
1,250 கிலோ அளவுக்கு இறால் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில்
ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக
1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்' தொழில்நுட்பம் சொன்ன சீனிவாசன்
நிறைவாக, வருமானம் பற்றிச் சொன்னார்.
''அறுவடை முடிஞ்ச பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும்
நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில பிடிக்கிற இறால், கிலோ
சராசரியா 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.
தஞ்சாவூர்ல நாங்களே, நேரடியா விற்பனை செஞ்சுடுவோம்.
உயிரோட இறால் கிடைக்கறதால உடனடியா வித்துடுது. ரெண்டாம் தவணை பிடிக்கிற
இறாலை கிலோ 300 ரூபாய்னு வியாபாரிகளுக்கு வித்துடுவோம். இது மூலமா, மொத்தம்
ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, எல்லா
செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல, ஒரு ஏக்கர்
குட்டையில, வருஷத்துக்கு ரெண்டு தடவை இறால் வளத்து, 4 லட்சம் ரூபாய்
அளவுக்கு லாபம் பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.
ஆலோசனை தேவையா?

நெற்பயிரைக் காப்பாற்றிய இறால் தண்ணீர்!
கடந்த ஆண்டின் கடும் வறட்சியிலும்கூட பிள்ளையார்நத்தம்
கிராமத்தில் பலருடைய நிலங்களில் நெற்பயிர் செழித்து வளர்ந்து, நல்ல பலனைக்
கொடுத்திருக்கிறது. இதற்கும் கைகொடுத்திருக்கிறது... இறால் பண்ணை. இதைப்
பற்றி பேசும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன், ''போன சம்பா பருவத்துல 7
ஏக்கர் நெல் சாகுபடி செஞ்சுருந்தேன். கடுமையான வறட்சியால பயிர்கள் கருக
ஆரம்பிச்சிடுச்சு. அப்போ, இந்த இறால் குட்டையில் இருந்து கொடுத்த தண்ணீரைப்
பாய்ச்சித்தான் என்னோட பயிரைக் காப்பாத்தினேன். இறாலோட கழிவும், சத்தான
தீவனமும் தண்ணீர்ல இருந்ததால, பயிர்கள் நல்லா செழிப்பாகி, கதிர்களும் நல்லா
வாளிப்பா வந்துச்சு. இந்த கிராமத்துல நிறைய பேரோட பயிரை இந்த இறால் குட்டை
தண்ணிதான் காப்பாத்திக் கொடுத்துச்சு'' என நெகிழ்ச்சியோடு சொன்னார்.
தொடர்புக்கு,
கடல் பொருள் ஏற்றுமதி வாரியம் சென்னை.
தொலைபேசி: 044-26269192.சீனிவாசன்
செல்போன்: 90434-11312
கடல் பொருள் ஏற்றுமதி வாரியம் சென்னை.
தொலைபேசி: 044-26269192.சீனிவாசன்
செல்போன்: 90434-11312
Wednesday, August 07, 2013
Diet for Osteoarthritis
Diet for Osteoarthritis - Foods to eliminate
Listed here are foods to avoid if you want to get started on a diet for osteoarthritis.
•Fried foods
•Foods with partially hydrogenated trans fats - such as margarine, chips, baked goods
•Saturated fats - such as animal fats (butter)
•Sugar - white and raw sugar (sugar that occurs in fruit is OK)
•White flour, rice and pasta (substitute whole grain versions)
•Most fast food and prepackaged foods and snacks
•Corn oil, safflower oil, sunflower oil, soy-based oils (substitute extra virgin olive oil)
Diet for Osteoarthritis - Foods to include in your diet
Foods with Vitamin C -
•Papaya
•Bell peppers (yellow, red and green)
•Broccoli
• sprouts
•Strawberries
•Oranges
•Kiwifruit
•Cauliflower (boiled)
•Kale (boiled)
•Grapefruit
•Tomatoes
•Raspberries
Foods with Vitamin D - Osteoarthritis progresses more slowly in patients who have plenty of Vitamin D in their diet.
Foods that contain Vitamin D are: wild-caught salmon, sardines, shrimp, fortified milk, cod, and eggs. If you check food labels, you can also find Vitamin D-fortified orange juice and yogurt. Vitamin D is one nutrient that can be difficult to get through diet alone. I personally supplement with Vitamin D daily.Exposing to sunrays(early morning mostly)for 10mins,it is a natural vitamin
Foods that contain Beta-Carotene - This compound is an antioxidant that's been shown to help protect joints and slow down osteoarthritis. Foods that contain high levels of beta carotene are:
•Carrots
•Boiled spinach
•Sweet potatoes with skin
•Kale
•Collard greens
•Romaine lettuce
Spice up your diet for osteoarthritis with anti-inflammatory spices
•Ginger
•Oregano
•Rosemary
•Sage
•Thyme
•Turmeric
As you can see this diet plan is heavy on healthy fruits and vegetables. Besides treating your osteoarthritis symptoms, a diet rich in fruits and vegetables will likely make you healthier overall, plus you may even lose weight.
தேன்
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
Monday, August 05, 2013
Computers and peripherals Price as of 5th August
As per my recent visit to market, the below is the range of prices (inclusive of all taxes) and Brands
as of 5th August
1.Intel i5 3330 Processor - 11,100 - 3 rd gen 3.2 GHZ
2.Motherboard - 61BF Intel (8port USB, 4 Sata no Graphic cards- 14,200 ( Combo with i53330) - 14,200
3.Motherbpard - 61WW - 11,800 (combo with i5 processor)
4. 900 - for ATX cabinet at any size ( Zebronics/Odyssey)
5.4GB GVM - strotium - Ram - lifetime warranty - Dynet - 1600
6.WD HDD seagate - 3900
7.Graphics card Nvidia- Geforce 1GB - 1700
8.Speakers - 550
9.Samsung DVD writer or LG - 960
10.Wireless KB/Mouse - 1069 (Multi Media) and USB KB/Mouse MM ( Iball) ( 650 )
11.UPS - 1600
12.Monitor 21.5 Acer with HDMI - 8200 without HDMI other brands 7500
Also Laptop in Market the Price is 1.5/2K More than Flipkart /onlilne pricing
HP Pavilion 2229 TU in market 36,100 and in Online 34,780
as of 5th August
1.Intel i5 3330 Processor - 11,100 - 3 rd gen 3.2 GHZ
2.Motherboard - 61BF Intel (8port USB, 4 Sata no Graphic cards- 14,200 ( Combo with i53330) - 14,200
3.Motherbpard - 61WW - 11,800 (combo with i5 processor)
4. 900 - for ATX cabinet at any size ( Zebronics/Odyssey)
5.4GB GVM - strotium - Ram - lifetime warranty - Dynet - 1600
6.WD HDD seagate - 3900
7.Graphics card Nvidia- Geforce 1GB - 1700
8.Speakers - 550
9.Samsung DVD writer or LG - 960
10.Wireless KB/Mouse - 1069 (Multi Media) and USB KB/Mouse MM ( Iball) ( 650 )
11.UPS - 1600
12.Monitor 21.5 Acer with HDMI - 8200 without HDMI other brands 7500
Also Laptop in Market the Price is 1.5/2K More than Flipkart /onlilne pricing
HP Pavilion 2229 TU in market 36,100 and in Online 34,780
Thursday, October 25, 2012
மருத்துவ குறிப்புகள்
மழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும்.
சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
விரவி மஞ்சள்
சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
விரவி மஞ்சள்
மழைக்காலத்தில் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி ஏற்படும். இதனை
தவிர்க்க விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் நனைத்து அதை விளக்கில் காட்டி
சுடவேண்டும்.
அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.
மஞ்சள்தூள் ஆவி பிடிங்க
ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
துளசி இலை
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
பனங்கிழங்கு
மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
மழைக்கால கசாயம்
மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.
மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.
தலைப்பாரம் நீங்க
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
சாம்பிராணி புகை போடுங்க
ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
தும்மல் தீர்க்கும் தூதுவளை
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்.
பேராசிரியர் ரமணிராஜ்.
சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம்.
"ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடமாகும்.
ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் இருந்தால் ஜலதோஷத்தால் வரும் சாதாரண பிரச்சினைகள் அவற்றை அதிகப்படுத்திவிடும்.
அடிக்கடி மூக்கில் தண்ணீராக ஒழுகினால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.எஸ்.எப். என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி தலையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல்பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி உள்ளது. இவற்றிற்கிடையேயான இடைவெளி அரித்துவிட்டாலோ, பாதிக்கபட்டாலோ, அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியே தண்ணீராக சிலருக்கு வெளியேறும். சாதாரண ஜலதோஷம் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விடும் போதும், காற்றில் உள்ள கிருமிகளை சுவாசிக்கும் போதும் எளிதாக மூளையை தாக்கலாம்.
இப்போது சுமார் 80 சதவீதம் பேருக்கு மூக்குத்தண்டு வளைந்துதான் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த வளைவுப் பிரச்சினை தருவதில்லை. மூக்குத்தண்டின் வளைவு அதிகமாகி வலது மூக்கு அல்லது இடது மூக்கு சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்தும் போது சைனஸ் பிரச்சினை ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. நவீன நோய் பரிசோதனை கருவிகள் வந்துவிட்டதாலும், எண்டோர்ஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மூலமும் இப்போது சைனஸ்க்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.
அலர்ஜி, காளான், நுண்கிருமிகள் மூலம் மூக்கில் சதை (பாலிப்) வளரும். மருந்துகளால் இந்த சதை வளர்ச்சியை சரிப்படுத்துவது கடினம். இதையும் சைனஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நோய் எதிர்ப்பு சக்திதிறன் குறைந்தவர்கள், நீரிழிவுநோய் கொண்டவர்கள், கேன்சர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
காளான் வகை சதை வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டால் கண் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வைத் திறனை குறைக்கவும், சில சமயம் மூளையை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.
குழந்தைகளுக்கு சைனஸ் வருமா?
குழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்பதால் சைனஸ் தொந்தரவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறு வயதிலேயே சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயற்சிக்கவும். அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலை எனில் 10 வயது வரை மருந்து மாத்திரைகள் கொடுத்து நோயின் வீரியத்தை அதிகப்படுத்தாமல் காலம் தள்ளியபின் அறுவை சிகிச்சை செய்யலாம்.
"காது" கொடுத்துக் கேளுங்க...
ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.
அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.
தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.
காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் "பட்ஸ்" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக "பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?
* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.
* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.
மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.
- சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவு கூடுதல் பேராசிரியர் ரமணிராஜ்.
அப்போது கரும்புகை கிளம்பும். இந்த புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி, நெஞ்சுவலி போன்றவை நீங்கும்.
மஞ்சள்தூள் ஆவி பிடிங்க
ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கரண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி அதை அடுப்பில் சூடேற்றவும். அப்போது வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.
துளசி இலை
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
பனங்கிழங்கு
மழைக்கால ஜலதோஷம் நீங்கவும், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கு சிறந்த மருந்து. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அத்துடன் பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.
மழைக்கால கசாயம்
மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு தொல்லை ஏற்படுத்தும். இந்த சளி தொந்தரவு நீங்க தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம். சளியினால் ஏற்படும் இறைப்பு நீங்கும்.
மூச்சுத்திணறலுக்கு முசுமுசுக்கை
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட மூச்சு இறைப்பு குணமாகும்.
தலைப்பாரம் நீங்க
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி வெதுவெதுப்பாக அதை தலையில் நெற்றியில் பற்று போட தலையில் உள்ள நீர் இறங்கி தலைபாரம் குணமாகும். நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
சாம்பிராணி புகை போடுங்க
ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
தும்மல் தீர்க்கும் தூதுவளை
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட எந்தவித சளிகபம் இருந்தாலும் குணமாகும்.
பேராசிரியர் ரமணிராஜ்.
சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம்.
"ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளுக்கு மத்தியில் உள்ள வெற்றிடமாகும்.
ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் இருந்தால் ஜலதோஷத்தால் வரும் சாதாரண பிரச்சினைகள் அவற்றை அதிகப்படுத்திவிடும்.
அடிக்கடி மூக்கில் தண்ணீராக ஒழுகினால் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.எஸ்.எப். என்ற நீர்ப்படலம் போன்றதொரு பகுதி தலையில் அமைந்துள்ளது. அதாவது மூக்கின் மேல்பகுதிக்கு மேல் மூளையின் அடிப்பகுதி உள்ளது. இவற்றிற்கிடையேயான இடைவெளி அரித்துவிட்டாலோ, பாதிக்கபட்டாலோ, அந்த நீர்ப்படலம் மூக்கின் வழியே தண்ணீராக சிலருக்கு வெளியேறும். சாதாரண ஜலதோஷம் என்று அதைக் கண்டுகொள்ளாமல் விடும் போதும், காற்றில் உள்ள கிருமிகளை சுவாசிக்கும் போதும் எளிதாக மூளையை தாக்கலாம்.
இப்போது சுமார் 80 சதவீதம் பேருக்கு மூக்குத்தண்டு வளைந்துதான் காணப்படுகிறது. எல்லோருக்கும் இந்த வளைவுப் பிரச்சினை தருவதில்லை. மூக்குத்தண்டின் வளைவு அதிகமாகி வலது மூக்கு அல்லது இடது மூக்கு சுவாசத்தில் சிக்கலை ஏற்படுத்தும் போது சைனஸ் பிரச்சினை ஏற்படுகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இல்லை. நவீன நோய் பரிசோதனை கருவிகள் வந்துவிட்டதாலும், எண்டோர்ஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை மூலமும் இப்போது சைனஸ்க்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது.
அலர்ஜி, காளான், நுண்கிருமிகள் மூலம் மூக்கில் சதை (பாலிப்) வளரும். மருந்துகளால் இந்த சதை வளர்ச்சியை சரிப்படுத்துவது கடினம். இதையும் சைனஸ் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். நோய் எதிர்ப்பு சக்திதிறன் குறைந்தவர்கள், நீரிழிவுநோய் கொண்டவர்கள், கேன்சர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் மூக்கில் சதை வளரும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சதை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
காளான் வகை சதை வளர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டால் கண் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தி பார்வைத் திறனை குறைக்கவும், சில சமயம் மூளையை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.
குழந்தைகளுக்கு சைனஸ் வருமா?
குழந்தையின் உடல்வளர்ச்சி மற்றும் உறுப்புகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்பதால் சைனஸ் தொந்தரவு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிறு வயதிலேயே சைனஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் மருந்து மாத்திரையில் சரிசெய்ய முயற்சிக்கவும். அறுவை சிகிச்சைதான் தீர்வாக இருக்க முடியும் என்ற நிலை எனில் 10 வயது வரை மருந்து மாத்திரைகள் கொடுத்து நோயின் வீரியத்தை அதிகப்படுத்தாமல் காலம் தள்ளியபின் அறுவை சிகிச்சை செய்யலாம்.
"காது" கொடுத்துக் கேளுங்க...
ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.
அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.
தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.
காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் "பட்ஸ்" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக "பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.
காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?
* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.
* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.
மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்.
- சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவு கூடுதல் பேராசிரியர் ரமணிராஜ்.
Thursday, May 22, 2008
Old Song's Honey Dew Lyrics -- பழைய பாடல்களின் தேன் துளி வரிகள்
வணக்கம் நண்பர்களே...
பழைய திரைப்பட பாடல்களை கேட்டு திளைக்கும் ஆர்வம் என்னை போல உங்களில் பலருக்கும் உண்டு...
அதை மனதில் கொண்டு... நான் கேட்டு ரசித்த வரிகளை.. இந்த பதிவின் மூலமாக.. உங்களுக்கு படைக்கின்றேன்...உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன... எனது முதல் பாடலாக... "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தில் இருந்து "பச்சைக்கிளி முத்துச்சரம் ......"
ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
ஆண்: தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று..
மெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு...
பெண்:வண்ணச்சோலை வாணம் பூமி யாவும் இன்பம் இங்கு..
இந்தக்கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு...
ஆண்: கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..
பெண்:நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ..
ஆண:பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பெண்:மெல்லப்பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..
சொல்லப்போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை.. ஆண்:முள்ளில்லாத தாழை போல தோகை மேனி என்று..
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு..
பெண்: அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ...
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ.
ஆண்: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
ஆண்:பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன் சிட்டோடு மெல்ல...
நான் தொட்டாடும் வேலை தோறும் போதை என்ன சொல்ல....
பெண்: கைத்தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு...
கண்பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று...
ஆண்: பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பெண்:கூடம் தனில் பாடம் பெரும் காலங்கல் சுவையல்லவோ...
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பழைய திரைப்பட பாடல்களை கேட்டு திளைக்கும் ஆர்வம் என்னை போல உங்களில் பலருக்கும் உண்டு...
அதை மனதில் கொண்டு... நான் கேட்டு ரசித்த வரிகளை.. இந்த பதிவின் மூலமாக.. உங்களுக்கு படைக்கின்றேன்...உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன... எனது முதல் பாடலாக... "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்தில் இருந்து "பச்சைக்கிளி முத்துச்சரம் ......"
ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
ஆண்: தத்தை போல தாவும் பாவை பாதம் நோகும் என்று..
மெத்தை போல பூவை தூவும் வாடை காற்றும் உண்டு...
பெண்:வண்ணச்சோலை வாணம் பூமி யாவும் இன்பம் இங்கு..
இந்தக்கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு...
ஆண்: கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..
பெண்:நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ..
ஆண:பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
பெண்:மெல்லப்பேசும் கள்ளப்பார்வை ஜாதிப்பூவின் மென்மை..
சொல்லப்போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை.. ஆண்:முள்ளில்லாத தாழை போல தோகை மேனி என்று..
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு..
பெண்: அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ...
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ.
ஆண்: காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ..
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
ஆண்:பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன் சிட்டோடு மெல்ல...
நான் தொட்டாடும் வேலை தோறும் போதை என்ன சொல்ல....
பெண்: கைத்தொட்டாட காலம் நேரம் போக போக உண்டு...
கண்பட்டாலும் காதல் வேகம் பாதி பாதி இன்று...
ஆண்: பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பள்ளிக்கூடம் போகலாம் பக்கம் ஓடி வா...
பெண்:கூடம் தனில் பாடம் பெரும் காலங்கல் சுவையல்லவோ...
பெண்: பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ..
மன்னன் என்னும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ...
ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ.
பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லை கொடி யாரோ..
பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ..
Monday, April 14, 2008
Arasu and Vasantha Marriage...
Wednesday, March 19, 2008
மாசி பண்டிகை -- குமாரபாளையம்
Friends... This post I am mentioning on Another festival Maasi Mariamman Pandigai in My Home town Kumarapalayam.
Mariamman - Mari = Rain , Amma = Mother - Mother of Rain.
festival lasts for more than a week,
Maasi pandigai ( Festival in the month of Maasi- a tamil month), celebrated to make Goddess Mariamman happy)
Important parts and activities of the Festival.
கம்பம் நடுதல் - Planting the post in the Temple to indicate the start of the festival
பூ மிதித்தல் - Devotees walking on burning coal , as a sacrifice to goddess Mariamman.
பொங்கல் வைத்தல் - Preparing Pongal a Dish with sugar and rice , dedigated to God.
மாரியம்மன் ஊர்வலம் - Procession of Goddess Mariamman , throught the town.
கம்பம் எடுத்தல் - Removing the Post from temple to indicate the end of festival
Every night we have dance, drama and cultural programs which lasts till early morning 2 am to 3 am.
Some pictures of the Festival.
Kaaveri Mariamman Procession - காவேரி மாரியம்மன் ஊர்வலம்
Making the devottees cool

Devotees in Procession With Drums

Preparing Pongal as a dedication to God.
Pongal is Boiling UP as a Indication that Pongal is Ready

A scene in the cultural Events...
Mariamman - Mari = Rain , Amma = Mother - Mother of Rain.
festival lasts for more than a week,
Maasi pandigai ( Festival in the month of Maasi- a tamil month), celebrated to make Goddess Mariamman happy)
Important parts and activities of the Festival.
கம்பம் நடுதல் - Planting the post in the Temple to indicate the start of the festival
பூ மிதித்தல் - Devotees walking on burning coal , as a sacrifice to goddess Mariamman.
பொங்கல் வைத்தல் - Preparing Pongal a Dish with sugar and rice , dedigated to God.
மாரியம்மன் ஊர்வலம் - Procession of Goddess Mariamman , throught the town.
கம்பம் எடுத்தல் - Removing the Post from temple to indicate the end of festival
Every night we have dance, drama and cultural programs which lasts till early morning 2 am to 3 am.
Some pictures of the Festival.
Devotees in Procession With Drums
Preparing Pongal as a dedication to God.
A scene in the cultural Events...
Friday, January 18, 2008
பொங்கலோ பொங்கல்....
Pongal - harvesting festival of South India.. particularly in Thamizh Community celebrated in Tamilnadu-India for 4 days
1.Bogi - January 14th 2008 - Removing Old things from House..
2.Pongal or Thaipongal - January 15th 2008 -Tamil calendar- Thai 1st - Main Festival Day , when people worship GOD and prepare The dish with milk,rice,grams and sugar called Pongal or Sakkarai pongal.Sakkarai means Sugar.
3.Mattupongal - January 16th 2008 - Thanks giving for Oxes and Animals assisted the farmers throughout the year in their agriculture
4.Kari Naal - January 17th 2008 - Feast Day, mainly with Non vegetables
My Pongal celebrations....
Rangoli by my Wife..


Pongal preparations....


Me in dhoti.. Tamilnadu Ethnical Dress
Preparing Pongal.. in Wood stove...

Dedicating to GOD..

We shout "Pongalo pongal" when the Pongal comes up....
1.Bogi - January 14th 2008 - Removing Old things from House..
2.Pongal or Thaipongal - January 15th 2008 -Tamil calendar- Thai 1st - Main Festival Day , when people worship GOD and prepare The dish with milk,rice,grams and sugar called Pongal or Sakkarai pongal.Sakkarai means Sugar.
3.Mattupongal - January 16th 2008 - Thanks giving for Oxes and Animals assisted the farmers throughout the year in their agriculture
4.Kari Naal - January 17th 2008 - Feast Day, mainly with Non vegetables
My Pongal celebrations....
Rangoli by my Wife..
Pongal preparations....
Me in dhoti.. Tamilnadu Ethnical Dress
Preparing Pongal.. in Wood stove...
Dedicating to GOD..
We shout "Pongalo pongal" when the Pongal comes up....
Tuesday, November 20, 2007
The Beautiful Boxer.....
Wednesday, November 14, 2007
Love ......அன்பு .... காதல்.... நேசம்... பாசம்....
Subscribe to:
Posts (Atom)